நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையிலிருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான ஆலோசனைகளை விரைவுபடுத்த உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னதாக, பெற்றோர்களின் கவலையைக் கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்கக் கூடாது என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.



