மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அருகே வங்கக் கடலில் ஐந்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளை அமைப்பதற்கு ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தின் கிழக்கே வங்கக் கடல் பகுதியில் 81 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஏற்கனவே எண்ணெய் வயல் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியிலேயே கூடுதலாக ஐந்து கிணறுகளைத் தோண்டுவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்காக உரிய விண்ணப்பத்தை அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
