தமிழக அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு முக்கிய நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டத்திற்கு 56.72 கோடி ரூபாயும், வேளாண் காடுகள் திட்டத்திற்கு 17.70 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பதற்காக 10 கோடி ரூபாயும், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக 7.35 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
