பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில், பங்குச் சந்தை ஆலோசகர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவியை சென்னை போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட், இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க மறுப்பு தெரிவித்தார். புகாரில் முகாந்திரம் இல்லை என பி.ஆர்.சுந்தர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், இருவரையும் விடுவித்ததைத் தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பினர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



