நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்த சிசிடிவி காட்சிகளில் நீல நிற உடையில் தப்பி ஓடும் நபர்கள், தாங்கள் அழைத்துச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் குழுவினர் தான் என சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மலைப்பகுதியை நோக்கி ஓடியவர்களில் சிலர் தப்பியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் குழுவினர் சீன எல்லைப் பகுதிக்குள் சென்றதாகவும், அந்தப் பகுதி முழுவதும் ஆறு அடி உயரத்திற்குச் சேறு சூழ்ந்துள்ளதால் அவர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறினார். நேபாள அரசு தரப்பிலிருந்து மட்டுமே வெள்ள பாதிப்பு குறித்த தகவல்கள் கிடைப்பதாகவும், சீன அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

