சென்னை மற்றும் திருச்சியில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. தமிழக முதலமைச்சர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம், தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் இந்தத் திறன் மையங்களை அமைக்க உள்ளது. இதன் மூலம் 600 உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
